GLIMPSES OF PARASHAKTI AKASHIC READING || 3 JUNE 2021 2 JUNE 2021, WEDNESDAY (IST) DEVI PARASHAKTI AKASHIK READING TAM...

GLIMPSES OF PARASHAKTI AKASHIC READING || 3 JUNE 2021 2 JUNE 2021, WEDNESDAY (IST) DEVI PARASHAKTI AKASHIK READING TAMIL TRANSCRIPT 08:51 PM - THE SPH APPEARANCE SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM. 09:13 PM TO 10:10 PM - DEVI PARASHAKTI AKASHIK READING. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS. *ஓம் ஓம் *ஓங்காரத்தின் மூலம், ஆதி, நாத விந்து கலாதி ஜோதி, பரமசிவனார் பாகத்திருக்கும் பராபட்டாரிகா, கைலாச ஸ்வாமினீ, பரஷோடசி பரமேஸ்வரி, பரமசக்தி, ராஜராஜேஸ்வரி, காமகோட்டத்து பிராட்டி, மீனாக்ஷி கண் மலர்ந்தேன்; மங்களம் தந்திட, நாலு வேதமும் நல்ல ஆக்கமும் சொல்லிட, நல் வழி காட்டிட, அபயம் அளித்திட, ஆனந்தம் தந்திட, பரஷோடசி கண் மலர்ந்தேன். *ஓம் ஓம் ஓம் ஓம் *வாருங்கள் மக்களே! வளமும் நலமும் வரமும் தந்து, வழியும் காட்டி, நல்லதெல்லாம் செய்து, நான் அருள் புரிகின்றேன். *ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் (In response to a question: “Why Hinduism Is Always at Attack in India”) *ஏன் ஹிந்து மதம் தொடர்ந்து தாக்கப்படுகிறது என்று கேட்கின்றாய். *மூடனே! தன் மீதே தனக்கு மரியாதை இல்லாது, தன் தருமத்தை பற்றிய அறிவும் இல்லாது, தன் தருமத்தை தான் காப்பதின் மூலமாகவே தான் உலகில் காக்கப் படுவோம் எனும் தெளிவும் இல்லாது, தன்னையே இழந்து நிற்கும் உங்களுக்கு, வேறு என்ன தான் இந்த மாயை கொடுக்க முடியும்? *உங்களை உயிர்ப்பிக்க, உங்களுக்கு அறிவுறுத்த, இந்த மாயைக்கு, வேறு ஒரு வழியும் இல்லாததனால், உதைத்தும், அடித்தும், துவைத்துமே திருத்துவது என்ற முடிவோடு இறங்கி இருக்கின்றாள்; விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டோர். *குருபதம் சேர்ந்தோரெல்லாம் உருபதம் சேர்வோர் *குருபதம் சென்றிடு, சிவபதம் பெற்றிடு. *ஓம் *ஓம் *ஆதி குருவும், ஆதி தெய்வமும், பரம்பொருள் நானே. *பரந்தாமன், பரம்பொருள், பரப்ரஹ்மம், பரமசிவன், பரமசக்தி, பரமாத்மன், எனும், பெயர்களால் எல்லாம் சூட்டப்பட்டு, அந்த பெயரெலாம் தாண்டி, முழுமையோடு இருக்கும், நாம ரூபம் கடந்த பரம்பொருள் நானே ஆதி குருவும் ஆதி தெய்வமும் *கேட்கும் பக்தர்களுக்கு, கேட்கும் வடிவிலே, கேட்டபடி வந்து, கேட்கும் வரம் தந்து, நல்வழி காட்டுகின்றேன் *உண்மையில் என் சுபாவத்திற்கு உருவம் பெயர் கடந்து இருக்கும் சத்தியமே என் நித்தியம். *மட மாந்தரே! பெயர் பேதத்திலும், ரூப பேதத்திலும் சிக்கி, ஒருவரோடு ஒருவர், க்ரோத பேதங்கள் பாராட்டி அழிவர். *நித்திய சுபாவ இருப்பு நிலையிலே, நாம ரூபம் கடந்த நல்ஞான ஸ்வரூபம் நான். *ஓம் ஓம் ஓம்


source https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/331162371709934

Comments

Popular posts from this blog

29 SEPTE​​MBER 2021 WEDNESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN, INITIATION AND AKASHIC READI...

SPH Nithyananda Paramasivam performs Shri Vidya Puja by Ganga Name Of The Convention: Himalaya Yatra Session on: Supreme...

EXCITING NEWS! LIVE DEVI PARASHAKTI AKASHIC READING AT 10PM IST (9:30AM PT) - AUGUST 29, 2021 Get your prayers blessed,...